அம்மாபட்டி அருகே டூவீலரில் சென்றவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து. இளைஞர் படுகாயம்.
Karur King 24x7 |13 Sep 2024 11:12 AM GMT
அம்மாபட்டி அருகே டூவீலரில் சென்றவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து. இளைஞர் படுகாயம்.
அம்மாபட்டி அருகே டூவீலரில் சென்றவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து. இளைஞர் படுகாயம். நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம், பவித்திரம் புதூர், தெற்கு தெருவை சேர்ந்தவர் பிரவீன் குமார் வயது 31. இவர் செப்டம்பர் 9ஆம் தேதி மதியம் 2:30 மணி அளவில், கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, அம்மாபட்டி பிரிவு சாலையில் இருந்து சேங்கல் மெயின் சாலைக்கு செல்லும் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார். இவரது வாகனம் அம்மாபட்டி பகுதியில் செயல்படும் ஒரு கோழிப்பண்ணை அருகே சென்ற போது, எதிர் திசையில் வேகமாக வந்த அடையாளம் தெரியாத ஒரு வாகனம், பிரவீன் குமார் ஓட்டிச் சென்ற டூவீலர் மீது மோதி விட்டு நிற்காமல் மின்னல் வேகத்தில் சென்று விட்டது. இந்த விபத்தில் வாகனத்துடன் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பிரவீன் குமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் திருச்சியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அறிந்த பிரவீன்குமாரின் மனைவி நர்மதா வயது 22 என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக மோதிவிட்டு நிற்காமல் சென்ற அந்த அடையாளம் தெரியாத வாகனம் எது? அதன் ஓட்டுனர் யார்? என்ற கோணத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.
Next Story