புகலூர்- ஃபயர் சர்வீஸ் அருகே டூவீலர் கார் நேருக்கு நேர் மோதி விபத்து. ஒருவர் படுகாயம்.
Karur King 24x7 |13 Sep 2024 11:25 AM GMT
புகலூர்- ஃபயர் சர்வீஸ் அருகே டூவீலர் கார் நேருக்கு நேர் மோதி விபத்து. ஒருவர் படுகாயம்.
புகலூர்- ஃபயர் சர்வீஸ் அருகே டூவீலர் கார் நேருக்கு நேர் மோதி விபத்து. ஒருவர் படுகாயம். நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர், சுல்தான்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன் வயது 45. இவர் செப்டம்பர் 10ஆம் தேதி மாலை 6 மணி அளவில், கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தில் இருந்து கட்டிப்பாளையம் செல்லும் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டிருந்தார். இவரது வாகனம் புகலூர் தீயணைப்பு நிலையம் அருகே சென்றபோது, எதிர்திசையில் TN 07 AY 4662 என்ற எண் கொண்ட மாருதி 800 கார், கண்ணிமைக்கும் நேரத்தில் வேகமாக சென்று, மனோகரன் ஓட்டிய டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் டூவீலர் உடன் கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் அடைந்த மனோகரனை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அறிந்த மனோகரின் மனைவி அம்பிகா வயது 43 என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக விபத்து ஏற்படும் வகையில் காரை ஓட்டிய கார் டிரைவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.
Next Story