ஆரணியில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மௌன ஊர்வலம்.
Arani King 24x7 |13 Sep 2024 11:35 PM GMT
ஆரணி, செப் 14 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம்யெச்சூரி மறைவையொட்டி ஆரணி மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆரணி அண்ணாசிலை அருகிலிருந்து பழைய பஸ்நிலையம் எம்ஜிஆர் சிலை வரை ‘மௌன ஊர்லவம் சென்றனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம்யெச்சூரி மறைவையொட்டி ஆரணி மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆரணி அண்ணாசிலை அருகிலிருந்து பழைய பஸ்நிலையம் எம்ஜிஆர் சிலை வரை ‘மௌன ஊர்லவம் சென்றனர். இதில் மாவட்டக்குழு உறுப்பினர் சி.அப்பாசாமி தலைமை தாங்கினார். வட்டாரத்தலைவர் ரமேஷ்பாபு அனைவரையும் வரவேற்றார். மேலும் இதில் கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் பெ.கண்ணன், சிவப்பிரகாசம் மற்றும் கூட்டணி கட்சியைச் சேர்ந்த விடுதலைசிறுத்தைகள் மாவட்டசெயலாளர் முத்து, நகரசெயாளர் மோ.ரமேஷ், மதிமுக மாவட்ட பொறுப்பாளர் எஸ்.கே.ரத்தினகுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பெரணமல்லூர். பெரணமல்லூர் பஸ் நிறுத்தம் அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வட்டார செயலாளர் பெரணமல்லூர் சேகரன் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீத்தாராம்யெச்சூரி உருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
Next Story