சோழன் நகரில் காச நோயால் அவதிப்பட்டவர் விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை.
Karur King 24x7 |14 Sep 2024 2:34 AM GMT
சோழன் நகரில் காச நோயால் அவதிப்பட்டவர் விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை.
சோழன் நகரில் காச நோயால் அவதிப்பட்டவர் விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை. கரூர் மாவட்டம், வெங்கமேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, ஜீவா நகர்,4-வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் வயது 56. கடந்த 7- ஆண்டுகளாக காச நோயால் அவதிப்பட்டு வந்த இவர், இதற்காக தொடர்ந்து கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆயினும் இவருக்கு குணமாகவில்லை. இதனால் இவர் விரக்தி அடைந்த மனநிலையோடு வாழ்ந்து வந்தார். இந்நிலையில் செப்டம்பர் 11ஆம் தேதி இரவு 10:30 மணி அளவில், அருகிலுள்ள சோழன் நகர் பகுதியில் வசித்து வந்த சுப்பிரமணியன் மகன் பிரகாஷ் வயது 34 என்பவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மறுநாள் காலை உறங்கச் சென்ற தந்தை இன்னும் எழவில்லையே என அவரது அறைக்குச் சென்று பார்த்த அவரது மகன் பிரகாஷ், தனது தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மேலும், இது தொடர்பாக காவல்துறையினருக்கு அளித்த புகாரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல் துறையினர், உயிரிழந்த சுப்பிரமணியன் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வெங்கமேடு காவல்துறையினர்.
Next Story