மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் எச்சூரி மறைவுக்கு அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை
Dharapuram King 24x7 |14 Sep 2024 3:00 AM GMT
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் எச்சூரி மறைவுக்கு அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் எச்சூரி மறைவுக்கு அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் இருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் சீதாராம் எச்சூரி மறைவிற்கு கருப்பு பேட்ச் அணிந்து அமைதி ஊர்வலம் சென்றனர். இந்த ஊர்வலம் பெரியார் சிலையில் இருந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக அண்ணா சிலையை வந்தடைந்தது. அங்கு சீதாராம் எச்சூரிக்கு இரண்டு நிமிடங்கள் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்துகொண்டு சீதாராம் எச்சூரியின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாராபுரம் நிர்வாகிகள் கனகராஜ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். மேலும் இந்நிகழ்ச்சியில் திருப்பூர் தெற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் செல்வராஜ், திமுக நகரக் கழக செயலாளர் முருகானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story