மது குடிக்க பணம் மறுப்பு ஒருவர் தற்கொலை

மது குடிக்க பணம் மறுப்பு ஒருவர் தற்கொலை
தற்கொலை
கள்ளக்குறிச்சியில் மது அருந்த பணம் தராததால் துாக்கிட்டு ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். கள்ளக்குறிச்சி ஏமப்பேரை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் மணி,37; குடிப்பழக்கம் உள்ளவர். இவர் கடந்த 11ம் தேதி மது அருந்த பணம் தருமாறு அவரது தந்தை செல்வராஜிடம் கேட்டுள்ளார். தந்தை பணம் தர மறுத்துள்ளார். இதனால் மனமுடைந்த மணி இரும்பு குடோன் பகுதியில் துாக்கு போட்டுக்கொண்டார். உறவினர்கள் மணியை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
Next Story