சீதாராம் யெச்சூரி மறைவிற்கு மெளன ஊர்வலம் - நினைவஞ்சலி கூட்டம்
Palladam King 24x7 |14 Sep 2024 6:50 AM GMT
கட்சி நிர்வாகிகள் பங்கேற்பு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி அவர்களின் மறைவிற்கு பல்லடத்தில் மௌன ஊர்வலம்- நினைவஞ்சலி கூட்டம்... பல்லடம் நகர அனைத்து கட்சிகளின் சார்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் தோழர் சீதாராம் யெச்சூரி அவர்களின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மௌன ஊர்வலம் நினைவஞ்சலி கூட்டம் நடைபெற்றது.. பல்லடம் அண்ணா சிலை முன்பு இருந்து மௌன ஊர்வலம் துவங்கி என்.ஜி.ஆர் ரோடு வழியாக காமராஜர் திடலில் நிறைவு பெற்று நடைபெற்ற நினைவஞ்சலி கூட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பல்லடம் ஒன்றிய செயலாளர் ஆர்.பரமசிவம் தலைமை தாங்கினார்... தோழர் சீதாராம் யெச்சூரி அவர்களின் பணிகளையும், அவருடைய தியாகத்தையும் நினைவு கூர்ந்து அனைத்து கட்சிகளின் சார்பாக தலைவர்கள் உரையாற்றினார்கள்.. இந்த நினைவஞ்சலி கூட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நகர செயலாளர் நா. ராஜேந்திர குமார், அதிமுக சார்பாக நகர பொருலாளர் சூ. தர்மராஜன், மறுமலர்ச்சி திமுக நகர செயலாளர் பாலசுப்பிரமணியம், காங்கிரஸ் கட்சி நகர தலைவர் ஈஸ்வரமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக பரமசிவம், மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக முஜிபூர்ரகுமான், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக ஓ. ரங்கசாமி, ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக ஒன்றிய குழு உறுப்பினர் வை.பழனிசாமி, பல்லடம் பாலாஜி ஈஸ்வரன் ஆகியோர் உரையாற்றினார்கள். நினைவஞ்சலி கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட திரளான மார்க்சிஸ்ட் கட்சியின் ஊழியர்கள் பங்கேற்றனர்.
Next Story