பல்லடம் அருகே பால் கறக்க சென்ற போது நேர்ந்த விபரீதம்.

காளை மாடு முட்டியதில் பெண் பலி-மங்கலம் போலீசார் விசாரணை.
பல்லடம் அடுத்த மங்கலம் பூமலூர் பகுதியைச் சேர்ந்தவர் மணி. இவரது மனைவி சாந்தி 45 பூசாரிக்காடு என்ற பகுதியில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சாந்தி வழக்கம்போல தங்களது மாட்டு பண்ணையில் பால் கறக்க சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அங்கிருந்த காளைமாடு ஒன்று சாந்தியை பலமாக முட்டி தூக்கி வீசியது.இதில் உடலில் ஏழு இடங்களில் குத்துக்காயத்துடன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் கொடுத்த தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் உயிரிழந்த சாந்தியின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இச்சம்பவம் குறித்து மங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் காளைமாடு அப்பகுதியில் இருந்தவர்களை முட்ட முயற்சித்தது. இதனை அடுத்து அங்கிருந்தவர்கள் ஒன்றிணைந்து மாட்டினை நீண்ட நேரம் போராடி பிடித்தனர். பல்லடம் அருகே காளைமாடு முட்டியதில் பால் கறக்கச் சென்ற பெண் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story