இளம் பெண் மாயம் தாய் போலீசில் புகார்!

இளம் பெண் மாயம் தாய் போலீசில் புகார்!
காணவில்லை
மணமேல்குடி அருகே கிருஷ்ணாஜி பட்டினத்தைச் சேர்ந்த பாத்திமா. இவருடைய16 வயது மகள் மணமேல்குடியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 12ஆம் தேதி பள்ளிக்கு செல்வதாக கூறியவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் எங்கு தேடியும் இளம்பெண் கிடைக்கவில்லை. இது குறித்து மணமேல்குடி காவல் நிலையத்தில் அவரது தாய் பாத்திமா புகார் அளித்தார். புகாரின் பெயரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மாயமான 16 வயது சிறுமியை தேடி வருகின்றனர்.
Next Story