அருகம்பாளையத்தில் அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்து களவாடிய மூன்று இளைஞர்கள் கைது.

அருகம்பாளையத்தில் அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்து களவாடிய மூன்று இளைஞர்கள் கைது.
அருகம்பாளையத்தில் அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்து களவாடிய மூன்று இளைஞர்கள் கைது. கரூர் மாவட்டம், வெங்கமேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அருகம்பாளையம், சிட்டி கார்டன் ஃபர்ஸ்ட் கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் சுபாஷ் வயது 31. இவர் செப்டம்பர் 12ஆம் தேதி காலை 9 மணி அளவில் வேலைக்கு சென்று விட்டு இரவு 8:30- மணிக்கு வீடு திரும்பியுள்ளார். அப்போது இவரது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து வீட்டில் இருந்த பணம் மட்டும் சில்வர் பிரேஸ்லெட் செயின் உள்ளிட்டவற்றை மூன்று இளைஞர்கள் களவாடி உள்ளனர். அவர்களைப் பார்த்ததும் சுபாஷ் கூச்சலிட்டதால் 3- இளைஞர்களையும் அப்பகுதி பொது மக்கள் சுற்றி வளைத்து கையும் காளவுமாக பிடித்தனர். பின்னர் இது குறித்து காவல்துறையினருக்கு புகார் அளித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் மூன்று பேரையும் பிடித்து விசாரித்த போது, கரூர், வெங்கமேடு, கொங்கு நகர் பகுதியை சேர்ந்த சபரிநாதன். இவர் கரூர் அரசு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். மேலும், வாங்க பாளையம், எம் கே நகரை சேர்ந்த சத்யநாராயணன் வயது 18, ஆத்தூர் மாங்காசோளி பாளையம் பகுதியைச் சேர்ந்த மதன்குமார் வயது 19 ஆகிய மூன்று பேரையும் கைது செய்து, அவர்கள் களவாடிய ரூபாய் 3700 மதிப்புள்ள பொருட்களை மீட்டனர். மேலும், மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர் வெங்கமேடு காவல்துறையினர்.
Next Story