உளுந்துார்பேட்டை நீதிமன்றத்தில் லோக் அதாலத்

உளுந்துார்பேட்டை நீதிமன்றத்தில் லோக் அதாலத்
அதாலத்
உளுந்துார்பேட்டை நீதிமன்றத்தில் நடந்த லோக் அதாலத்தில் 1.60 கோடி ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது. உளுந்துார்பேட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில், லோக் அதலாத் நடந்தது. இதற்கு வட்ட சட்டப் பணிகள் குழு தலைவர் நீதிபதி ஆறுமுகம் தலைமை தாங்கினார். குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கோமதி மற்றும் வழக்கறிஞர்கள், வட்ட சட்டப் பணிகள் குழு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். லோக் அதாலத்தில் வாகன விபத்து, சிவில் மற்றும் குடும்ப வழக்குகள் சமரசம் செய்யப்பட்டன. குடும்ப வழக்கு ஒன்றில் தம்பதியர் இருவரும் சமரசம் செய்து சேர்ந்து வாழ ஒப்புக்கொண்டனர். மேலும், 96 வழக்குகளில் ஒரு கோடியே 60 லட்சத்து 22 ஆயிரத்து 303 ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது. 42 வங்கி வழக்குகளுக்கு 32 லட்சத்து 95 ஆயிரத்து 589 ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது.
Next Story