மணல் கடத்தலில் ஈடுபட்டவர் கைது!
Pudukkottai King 24x7 |15 Sep 2024 2:08 PM GMT
குற்றச்செய்திகள்
பொன்னமராவதி அருகே ஈச்சம்பட்டி பகுதியிலுள்ள கண்மாயில் மணல் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் காரையூர் சப்இன்ஸ்பெக்டர் அருணகிரி மற்றும்போலீசார் ஈச்சம்பட்டி சாலை பிரிவு பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை போலீசார் மறித்து, சோதனை செய்தபோது அதில் கண்மாயிலிருந்து மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது.இதையடுத்து போலீசார் லாரியை ஓட்டிவந்த கண்ணதாசன் (35) என்பவரை கைது செய்து லாரியை பறிமுதல் செய்தனர்.
Next Story