பெண்ணிடம் செயின் பறிப்பு!
Pudukkottai King 24x7 |15 Sep 2024 2:11 PM GMT
குற்றச் செய்திகள்
கீரனூர் அருகே களமாவூர் சத்திரம் பகுதியை சேர்ந் தவர் சகுந்தலா. இவர் மகன், மருமகளுடன் வசித்து வருகிறார் இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு காற்றுக்காக கதவை திறந்து வைத்துவிட்டு தூங்கிக் கொண் டிருந்துள்ளார். நள்ளிரவு 2 மணி அளவில் வீட்டுக்குள் புகுந்த மர்மநபர் சகுந்தலா கழுத்தில் கிடந்த 6 பவுன் செயினை அறுத் துள்ளான். இதில் திடுக்கிட்டு எழுந்து அலறிய போது தனி அறையில் தூங்கிக் கொண்டிருந்த மகன், மருமகள் ஓடி வந்தனர். அப்போது தயாராக நின்ற பைக்கில் ஏறி மர்ம நபர் தப்பி சென்று விட்டான். இது குறித்து சகுந்தலா கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த கீரனூர் சப் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story