அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாட்டம்..

அம்மா மக்கள் முன்னேற்றக்  கழகத்தின் சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாட்டம்..
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாட்டம்..
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் திரு. டிடிவி. தினகரன் அவர்களின் ஆணைக்கிணங்க அனைத்து பகுதிகளிலும் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட உத்தரவிட்டிருந்தார். அதன்படி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நாமக்கல் வடக்கு மாவட்ட கழகம் சார்பில் மாவட்ட கழக செயலாளர் ஏ.பி. பழனிவேல் அவர்கள் தலைமையில் வெண்ணந்தூர் பேரூராட்சி பகுதியில் உள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி கோஷங்கள் எழுப்பி சிறப்பாக பேரறிஞர் அண்ணாவின் 116,வது பிறந்தநாளை கொண்டாடி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இந்த நிகழ்வில் மாவட்ட அவைத் தலைவர் எஸ். பன்னீர்செல்வம், மாவட்ட கழக துணைச் செயலாளர்கள் கா.முருகன், அம்பிகா, பொதுக்குழு உறுப்பினர் உதயகுமார், மற்றும் மாவட்ட அம்மா பேரவை, பேரூர் கழக நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள், என பலர் கலந்து கொண்டனர்.
Next Story