வீடு புகுந்து திருடிய ஆசாமி கைது

வீடு புகுந்து திருடிய ஆசாமி கைது
கைது
திருநாவலுார் அருகே வீடு புகுந்து திருடிய ஆசாமியை போலீசார் கைது செய்தனர். உளுந்துார்பேட்டை தாலுகா, பெரும்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் வீரமணி. இவர் கடந்த 28ம் தேதி கூலி வேலைக்கு சென்று இருந்தார். அப்போது வீரமணியின் வீட்டின் பூட்டை உடைத்து 7 சவரன் நகை, ரூபாய் 20 ஆயிரம் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.இது குறித்து திருநாவலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வந்தனர். விசாரணையின் பேரில் விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த அமீர் அப்பாஸ், 52; என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து மூன்று சவரன் நகை, 20 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
Next Story