சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு

சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
வழிபாடு
கள்ளக்குறிச்சி சாமியார் மடம் செம்பொற்சோதிநாதர் கோவிலில் ஆவணி மாத பிரதோஷ வழிபாட்டையொட்டி நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தது. நந்திபகவானுக்கு மாலை 5:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. வண்ண பூக்களால் அலங்காரம் செய்து, சிறப்பு பூஜைகள் நடத்தி, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. திருவாசகம் பாடப்பட்டு, கோவிலை வலம் வந்து பக்தர்கள் வழிபட்டனர்.இதேபோல் கள்ளக்குறிச்சி சிதம்பரேஸ்வரர், நீலமங்கலம் மற்றும் கள்ளக்குறிச்சி கமலா நேரு தெரு ஏகாம்பரேஸ்வரர், சோமண்டார்குடி சோமநாதீஸ்வரர், முடியனுார் மற்றும் தென்கீரனுார் அருணாசலேஸ்வரர், அரியபெருமானுார் ஆத்மஞான லிங்கேஸ்வரர், வீரசோழபுரம் அர்த்தநாரீஸ்வரர், கோவில்களில் சனிப்பிரதோஷ சிறப்பு வழிபாடுகள் நடந்தது. சின்னசேலம் கங்காதீஸ்வரர், ராயர்பாளையம் குமாரதேவர் மடம் பழமலைநாதர், கூகையூர் மற்றும் தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர் கோவில்களிலும், ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர், பாசார் பிரம்மபுரீஸ்வரர், மேலப்பழங்கூர் வேதபுரீஸ்வரர், சாத்தப்புத்துார் ஜோதிலிங்கேஸ்வரர் கோவில்களிலும் சனி பிரதோஷ வழிபாடு நடந்தது.
Next Story