வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு!

வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு!
கோவில்பட்டியில் வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வக்கீல் தெருவைச் சேர்ந்தவர் பழனிச்சாமி மனைவி நாச்சியார் அம்மாள் (48). கணவர் இறந்து விட்டதால், அவர் தனியாக வீட்டில் வசித்து . இந்நிலையில், அவர், கடந்த 13-ந்தேதி வீட்டை பூட்டி விட்டு தாப்பாத்தியில் உள்ள தனது தங்கையின் வீட்டுக்கு சென்றார். அங்கு சென்றபோது, அவரது தங்கை வீட்டை பூட்டிவிட்டு ெவளியூர் சென்றுவிட்டது தெரிய வந்தது.. இதை தொடர்ந்து அவர் அங்கிருந்து புறப்பட்டு பஸ்சில் கோவில்பட்டிக்கு நேற்று முன்தினம் திரும்பி வந்துள்ளார். வீட்டுக்கு சென்றபோது, அங்கு கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பதற்றத்துடன் அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, பீரோவும் உடைக்கப்பட்டு அதில் இருந்த 28 கிராம் தங்க நகைகள், ரூ.12 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவை திருடு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து அவர் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ வீட்டுக்கு சென்று பார்வையிட்டனர். தொடர்ந்து கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், நாச்சியார் அம்மாள் வீட்டை பூட்டிவிட்டு வௌியூர் செல்வதை நோட்டமிட்டு மர்மநபர்கள் கைவரிசை காட்டியது தெரிய வந்துள்ளது. மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளில் உள்ள மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
Next Story