செல்போன் தொலைந்ததால் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை!
Thoothukudi King 24x7 |16 Sep 2024 5:56 AM GMT
சூரங்குடி அருகே செல்போன் தொலைந்ததால் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம் சூரங்குடி அருகே மேல்மாந்தை கிராமத்தைச் சேர்ந்தவர் போஸ் மகன் செல்வ கருப்பசாமி (22) கூலி வேலை செய்து வருகிறார். கடந்த வாரம் மதுபோதையில் தனது செல்போனை தொலைத்து விட்டாராம். புது செல்போன் வாங்குவதற்கு தனது அம்மாவிடம் பணம் கேட்டாராம். அவர் பணம் கொடுக்க மறுத்து விட்டாராம். இதனால் மன வேதனை அடைந்த செல்வ கருப்பசாமி தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து சூரங்குடி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சக்திவேல் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story