பெண்களின் வெற்றிக்கு பின்னால் ஆண்கள் தான் உள்ளார்கள்- எம்எல்ஏ சிவகாமசுந்தரி விளக்கம்.

பெண்களின் வெற்றிக்கு பின்னால் ஆண்கள் தான் உள்ளார்கள்- எம்எல்ஏ சிவகாமசுந்தரி விளக்கம்.
பெண்களின் வெற்றிக்கு பின்னால் ஆண்கள் தான் உள்ளார்கள்- எம்எல்ஏ சிவகாமசுந்தரி விளக்கம். கரூர் மாவட்டம், கடவூர் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் காணியாளம்பட்டியில் உள்ள தனியார் கூட்டரங்கில், கடவூர் வடக்கு ஒன்றிய அவைத்தலைவர் கன்னியப்பன் ஆசிரியர் தலைமையில் பொது உறுப்பினர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கடவூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ராமலிங்கம், பொருளாளர் சின்னதுரை, கடவூர் வடக்கு ஒன்றிய துணை செயலாளர் மாரித்தங்காள், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் நந்தினி தேவி,மாவட்ட பிரதிநிதி முருகேசன், அமுல்ராஜ், மஞ்ச நாயக்கன்பட்டி, பள்ளப்பட்டி, பாப்பையம்பாடி, வடம்பாடி, வெள்ளப்பட்டி, கீரனூர், தென்னிலை ஊராட்சிகளை சேர்ந்த கிளைக் கழக செயலாளர்கள், பூத் பொறுப்பாளர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில், கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று சிறப்புரையாற்றினார். அப்போது, ஒவ்வொரு பெண்ணின் வெற்றிக்கும் பின்னாலும் ஆண்கள் தான் உள்ளார்கள் என கூறிய அவர், பல வருடங்களுக்கு முன்பு பெண்கள் ரவிக்கை கூட அணிய முடியாத சூழல் இருந்தது. அதுபோன்ற சூழலில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா கூறிய பெண்களுக்கான இட ஒதுக்கீட்டு கொள்கையை நிறைவேற்றி தந்தவர் கலைஞர் கருணாநிதி என்றும், இட ஒதுக்கீட்டில் 33 சதவீதம் என்பதை மாற்றி 50 சதவீதம் பெண்களுக்கு இட ஒதுக்கீடு உள்ளாட்சி அமைப்புகளில் ஏற்படுத்தி தந்துள்ளனர். இதன் அடிப்படையில் கடவூர் ஊராட்சி ஒன்றியத்தில் 10 ஆண்களும், 10 பெண்களும் பொறுப்புகளில் உள்ளனர் என்றும், இந்தியாவிலேயே டாக்டர் கலைஞர் மட்டும்தான் பெண்கள் உள்ளாட்சி அமைப்புகளில் பங்கு பெற வேண்டும் என்ற முற்போக்கு திட்டத்தினை அளித்தார் என விளக்கினார்.
Next Story