திருப்பூரில் வடக்கு மாவட்ட பாஜக கட்சி சார்பில் உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி!

திருப்பூரில் வடக்கு மாவட்ட பாஜக கட்சி சார்பில் உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நடைபெற்றது.
வடக்கு மாவட்ட பாஜக கட்சி  சார்பில் உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி . பாரதியஜனதா கட்சியின் உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சிகள் தீவிரமாக நடைபெற்றது. அதன் ஓர் பகுதியாக மாவட்ட தலைவர்  செந்தில் வேல்  தலைமையில் உறுப்பினர் சேர்க்கை  நடைபெற்றது, அதில் சிறப்பு விருந்தினராக ஆந்திர மாநில தலைவரும் உறுப்பினர் சேர்க்கை இயக்கம் தேசிய பொறுப்பாளர்புரந்தரேஸ்வரி   கலந்து கொண்டார் ,திருப்பூர் வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட சட்டமன்ற பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.வேலம்பாளையம் மண்டல் பகுதியில் சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது.எம்.எஸ் நகர் மண்டல் பகுதியில் உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டார்.அதனை தொடர்ந்து செரங்காடு மண்டல் பட்டத்தரசி அம்மன் காலணி,காட்டுவளவுபட்டியல் சமூக மக்கள் வசிக்கும் பகுதியில் வீடு வீடாக சென்று மக்களுடன் கலந்துரையாடி தேவைகளை கேட்டறிந்து உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டார், இந்த நிகழ்வில் மாநில பொது செயலாளர் APமுருகானந்தம்,  மாநில செயலாளர் மலர்க்கொடி, மாவட்ட பொது செயலாளர்  பாலசுப்பிரமணி, மாவட்ட செயலாளர் மற்றும் உறுப்பினர் சேர்க்கை பொறுப்பாளர்  கௌதம் மற்றும் மாநில மாவட்ட மண்டல அணி பிரிவு கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்…
Next Story