மக்கள் பிரதிநிதிகளுடன் அதிகாரிகள் கலந்து ஆலோசனை எம் எல் ஏ நகர் மன்ற தலைவர் பங்கேற்பு

மக்கள் பிரதிநிதிகளுடன் அதிகாரிகள் கலந்து ஆலோசனை எம் எல் ஏ நகர் மன்ற தலைவர் பங்கேற்பு
திருச்செங்கோடு நகராட்சி, நகர்மன்ற கூட்ட அரங்கத்தில் திருச்செங்கோடு நகராட்சிக்கு சம்பந்தப்பட்ட அனைத்து துறை அரசு அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுடன் கொமதேக பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்எல்ஏ அவர்கள் தலைமையிலும், நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு முன்னிலையிலும் திருச்செங்கோடு நகராட்சி வளர்ச்சி சம்பந்தமாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்தில் திருச்செங்கோடு நகராட்சி 33 வார்டுகளிலும் தேவைப்படும் அடிப்படை வசதிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. நகராட்சி நகர் மன்ற உறுப்பினர்கள் தங்களுக்கு தேவையான வசதிகளை சட்டமன்ற உறுப்பினர் மற்றும் நகரமன்ற தலைவர் மூலம் அதிகாரிகளிடம் எடுத்து கூறினார்கள்.வருவாய்த்துறை, போக்குவரத்து துறை நெடுஞ்சாலைத்துறை, வேளாண்மை துறை உள்ளிட்ட துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்
Next Story