உடல் உறுப்புகள் தானம் செய்த அஜய் உடலுக்கு மாவட்ட ஆட்சியர் அஞ்சலி

உடல் உறுப்புகள் தானம் செய்த அஜய் உடலுக்கு மாவட்ட ஆட்சியர் அஞ்சலி
திண்டுக்கல் ஆர்.எம்.காலனி மின் மயானத்தில் உடல் உறுப்புகள் தானம் செய்த அஜய் உடலுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டம், ஒருத்தட்டு கிராமம் உட்கடை நாகையாகவுண்டபட்டி பகுதியை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் மகன் அஜய் (வயது 23) 15.09.2024 அன்று இரு சக்கர வாகனத்தில் செல்லும் பொது விபத்து ஏற்பட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (16.09.2024) உயிரிழந்தார். அவரது பெற்றோர் பழனிச்சாமி அவர்கள் அஜயின் உடலை தானம் செய்வதாக தெரிவித்தார். அதையடுத்து திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவரது உடல் உறுப்புகள் தானம் பெறப்பட்டது. அதையடுத்து, திண்டுக்கல் மாநகராட்சி ஆர்.எம்.காலனி மின்மயானத்தில் நடைபெற்ற இறுதிச்சடங்கில் அஜய் உடலுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி அரசு சார்பில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்ச்சியில், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நாகராஜ பூபதி, நிலக்கோட்டை வட்டாட்சியர் தனுஷ்கோடி, அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
Next Story