ராசிபுரம் அருகே திருநங்கைகளின் திருக்கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. சுற்றுவட்டார பகுதியில் இருந்து திரளான திருநங்கைகள் கலந்து கொண்டு சாமி தரிசனம்..

ராசிபுரம் அருகே திருநங்கைகளின் திருக்கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. சுற்றுவட்டார பகுதியில் இருந்து திரளான திருநங்கைகள்  கலந்து கொண்டு சாமி தரிசனம்..
ராசிபுரம் அருகே திருநங்கைகளின் திருக்கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. சுற்றுவட்டார பகுதியில் இருந்து திரளான திருநங்கைகள் கலந்து கொண்டு சாமி தரிசனம்...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை அருகே உள்ள அரியாங்கவுண்டம்பட்டி பனந்தோப்பில் எழுந்தருளியுள்ள திருநங்கைகளின் சார்பில், ஸ்ரீ அங்காளம்மன்,ஸ்ரீ கருப்பனார் ஆலயமானது புதிதாக கட்டப்பட்டுள்ளது. முன்னதாக ஆவணி 21 ஆம் தேதி முகூர்த்த கால் நடப்பட்டு,ஆவணி 30 ஆம் தேதி கோபுர கலசங்களுக்கு காவேரி ஆற்றில் இருந்து தீர்த்த குடங்கள்,முளைப்பாரி ஊர்வலமானது சென்றது. இந்த நிலையில் (16.09.24) திங்கட்கிழமை அதிகாலை 4.30 மணி அளவில் ரஷசா பந்தனம், 2 கால யாக பூஜைகள், நாடி சந்தனம் உள்ளிட்ட பல்வேறு யாகசாலை பூஜைகள் நடைபெற்று இறுதியாக திருநங்கைகள் கோவிலான ஸ்ரீ அங்காளம்மன், ஶ்ரீ கருப்பனார் ஆலய கோபுரங்களுக்கு வேத மந்திரங்கள் முழங்க மகா கும்பாபிஷேகம் ஆனது நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் நடைபெற்று மகா தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவை காண சுற்று வட்டார பகுதியில் இருந்து திரளான திருநங்கைகள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது..
Next Story