மயானத்தை ஆக்கிரமித்து பூங்கா அமைப்பதை கண்டித்து மனு

மயானத்தை ஆக்கிரமித்து பூங்கா அமைப்பதை கண்டித்து மனு
அகரம் அருகே மயானத்திற்கு செல்லும் வழித்தடத்தை ஆக்கிரமித்து பூங்கா அமைப்பதை கண்டித்து அப்பகுதி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்
திண்டுக்கல் மாவட்டம் அகரம் பஞ்சாயத்து 11 வது வார்டு கஸ்தூரிபாபுரம் பகுதியில் நூற்றுக்கு மேற்பட்டோர் குடும்பங்களாக வசித்து வருகின்றனர். அப்பகுதிக்கு அருகிலேயே நீர்நிலை புறம்போக்கில் மயானம் உள்ளது. அந்த மயானத்திற்கு செல்லும் பாதையில் நீர்நிலை புறம்போக்கு பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தைச் சேர்ந்தவர்கள் ஆக்கிரமிப்பு செய்து பூங்கா அமைப்பதற்காக அகரம் பேரூராட்சியில் மனு கொடுத்தனர். அதன்படி அகரம் பேரூராட்சியும் பூங்கா அமைப்பதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளனர். மயானத்திற்கு செல்லும் பாதையில் நீர் வழி புறம்போக்கில் பூங்கா அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் அப்பணிகளை தடுத்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
Next Story