தாலுக்கா அலுவலகத்தில் தரை தளத்தில் செயல்படும் வட்ட வழங்கல் துறை அலுவலகம்

தாலுக்கா அலுவலகத்தில் தரை  தளத்தில் செயல்படும் வட்ட வழங்கல் துறை அலுவலகம்
குமாரபாளையம் தாலுக்கா அலுவலகத்தில் வட்ட வழங்கல் துறை அலுவலகம் தரை தளத்தில் செயல்படுகிறது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுக்கா அலுவலகத்தில் வட்ட வழங்கல் துறை அலுவலகம் 2வது தளத்தில் செயல்பட்டு வந்தது. ரேஷன்கார்டு விண்ணப்பம் செய்ய வரும் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் இரண்டு மாடி ஏறி செல்ல சிரமம் ஏற்பட்டு வந்தது. இது குறித்து மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலர் காமராஜ், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சித்ரா, உஷா, மல்லிகா உள்ளிட்ட பலர் சார்பில், வட்ட வழங்கல் துறை அலுவலகம் தரை தளத்திற்கு மாற்றம் செய்ய தாசில்தார் சிவகுமாரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதன்பின் வட்ட வழங்கல் துறை அலுவலகம் சார்பில் தரை தளத்தில் செயல்படுகிறது. இதனால் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Next Story