தி.மு.கழகத்தின் பவளவிழாவை முன்னிட்டு நிர்வாகிகள் இல்லங்களில் கொடியேற்றினர்.
Rasipuram King 24x7 |16 Sep 2024 1:59 PM GMT
தி.மு.கழகத்தின் பவளவிழாவை முன்னிட்டு நிர்வாகிகள் இல்லங்களில் கொடியேற்றினர்.
தி.மு.கழகத்தின் பவளவிழாவை முன்னிட்டு மாவட்ட- ஒன்றிய-நகர-தி.மு.கழகத்தின் பவளவிழாவை முன்னிட்டு பேரூர் கழகத்தினர் "இல்லந்தோறும் கழகக்கொடி பறக்கட்டும் என நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான கே.ஆர். என். இராஜேஸ்குமார் எம்.பி., அவர்கள் அறிக்கை வெளியிட்டார். அதில் மாண்புமிகு கழக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க திராவிட முன்னேற்றக் கழகத்தின் பவளவிழாவை முன்னிட்டு நாமக்கல் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட மாவட்ட- ஒன்றிய-நகர- பேரூர் கழகத்தினர், சார்பு அணி நிர்வாகிகள் அனைவரது இல்லங்கள் அலுவலகங்கள் வணிகவளாகங்களில் கழகக்கொடி ஏற்றிக் கொண்டாடிட வேண்டும் என நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான கே.ஆர்.என்.இராஜேஸ்குமார்,எம்.பி., அவர்கள் அறிவித்துள்ளர். அதன்படி ராசிபுரத்தில் திமுக இளைஞர் அணி கார்த்தி அவரது இல்லத்தில் கட்சி கொடியை ஏற்றி வைத்து சிறப்பித்தார். இதேபோல் பல்வேறு இடங்களில் திமுக நிர்வாகிகள் அவர் அவர் இல்லங்கள், மற்றும் வணிக வளாகம் போன்ற இடங்களில் கொடி யேற்றி வருகின்றனர்.
Next Story