தூய்மையே சேவை திட்ட விழிப்புணர்வு பேரணி
Rasipuram King 24x7 |16 Sep 2024 2:49 PM GMT
தூய்மையே சேவை திட்ட விழிப்புணர்வு பேரணி
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சி சார்பில் மத்திய அரசின் தூய்மையே சேவை திட்டத்தின் கீழ் நகர தூய்மையை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது. ராசிபுரம் எஸ்ஆர்வி பெண்கள் பள்ளி முன்பாக துவங்கிய பேரணியை ராசிபுரம் நகர்மன்றத் தலைவர் முனைவர் திருமதி ஆர்.கவிதா சங்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார். நகரின் முக்கிய வீதிகள் வழியாக தூய்மையை வலியுறுத்தி வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தியவாறு பள்ளி மாணவியர்கள் பேரணியில் பங்கேற்றனர். பேரணியில் நகராட்சி சுகாதார அலுவலர் மு.செல்வராஜ், எஸ் .ஆர் . வி .பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதல்வர் ஏ.ஆரோக்கியதாஸ் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்கள், பள்ளி மாணவியர்கள் என பலரும் பங்கேற்றனர்.
Next Story