ரயில் நிலையத்தில் போதைப் பொருள் சோதனை தீவிரம்!
Thoothukudi King 24x7 |16 Sep 2024 4:30 PM GMT
தூத்துக்குடி ரயில் நிலையத்தில் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் இன்று திடீா் சோதனை மேற்கொண்டனா்.
தமிழகத்தில் போதை பொருள்கள் கடத்தப்படுவதாக வந்த புகாரைத் தொடா்ந்து தமிழகம் முழுவதும் ரயில் நிலையங்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தூத்துக்குடியில், துறைமுகம் ரோடு, ரயில் நிலையம் ரோடு, மற்றும் மாப்பிள்ளையுரணி பகுதிகளில் தூத்துக்குடி போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு ஆய்வாளர் எழில் சுரேஷ் சிங், எஸ்ஐ அனிதா வேணி தலைமையில் போலீசார் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். மேலும் தூத்துக்குடி ரயில் நிலையத்தில் ஆர்பிஎப், மற்றும் ரயில்வே போலீசார் உடன் இணைந்து போதைப் பொருள் சோதனையை போலீசார் தீவிரமாக மேற்கொண்டனர். இதில், ரயில் நிலையம் வந்த பயணிகளின் உடைமைகள் சோதனை செய்யப்பட்டது. மேலும், ரயில் பெட்டிகள், சரக்கு பெட்டகங்கள் உள்ளிட்ட இடங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
Next Story