தேசிய நெடுஞ்சாலையில் ஒரு வழிப்பாதையில் வந்த சொகுசு கார் இரு சக்கர வாகனம் மீது மோதி விபத்து

வைரலாகும் சிசிடிவி காட்சிகள்
பல்லடத்தில் திருச்சி to கோவை தேசிய நெடுஞ்சாலை அண்ணா நகர் அருகே பல்லடத்தில் இருந்து கோவையை நோக்கி இருசக்கர வாகனத்தில் பொங்கலூரை சேர்ந்த ரவிக்குமார் அவரது மனைவி புவனேஸ்வரி மற்றும் மகள் என 3 பேர் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர் புறமாக ஒரு வழி பாதையில் பல்லடம் நோக்கி ஆபத்தை உணராமல் வந்த சொகுசு கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.இதில் இரு சக்கர வாகனம் பல்டி அடித்து இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் சாலையில் தூக்கி வீசப்பட்ட்னர்.இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.
Next Story