கருத்து கேட்பு கூட்டம் ஒத்திவைப்பு. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

கருத்து கேட்பு கூட்டம் ஒத்திவைப்பு. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
கருத்து கேட்பு கூட்டம் ஒத்திவைப்பு. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு. பொதுவாக கல்குவாரிகளுக்கு உரிமை காலம் முடிந்து விட்டால், உரிமையை புதுப்பிக்கவும், இதே போல புதிதாக கல்குவாரிகள் அமைக்கப்படுவதாக இருந்தால், அதற்கு பொதுமக்களிடம் கருத்து கேட்ட பிறகே அனுமதி வழங்கப்படுகிறது. இதற்காக கரூர் மாவட்டம், புகலூர் தாலுக்கா, அஞ்சூரில் கல்குவாரி கருத்து கேட்பு கூட்டம் இன்று நடைபெறுவதாக இருந்தது. இதனிடையே இந்த கூட்டத்தை ஒத்திவைத்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கரூர் மாவட்டம், புகலூர் தாலுக்கா, அஞ்சூர் கிராமத்தில் கல்குவாரி அமைப்பதற்காக கருத்து கேட்பு கூட்டம் இன்று செப்டம்பர் 17ம் தேதி நடைபெறுவதாக அறிவிப்பு செய்யப்பட்டு இருந்தது. இன்று மிலாடி நபி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், கருத்து கேட்பு கூட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டு, வரும் செப்டம்பர் 20ஆம் தேதி காலை 11 மணிக்கு அஞ்சூர் ஊராட்சி, கொளந்தா பாளையம் அருகே உள்ள ரங்கசாமி கோவிலில் பொதுமக்கள் கருத்து கூட்டம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story