எம்.பி.சி இட ஒதுக்கீடு தியாகிகளின் திருவுருவ படத்திற்கு பாமக சார்பில் நினைவஞ்சலி.

எம்.பி.சி இட ஒதுக்கீடு தியாகிகளின் திருவுருவ படத்திற்கு   பாமக சார்பில் நினைவஞ்சலி.
எம்.பி.சி இட ஒதுக்கீடு தியாகிகளின் திருவுருவ படத்திற்கு பாமக சார்பில் நினைவஞ்சலி.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே எம்.பி.சி இட ஒதுக்கீடு தியாகிகளின் திருவுருவ படத்திற்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. 1987ல் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசு அவர்களின் தலைமையில் நடைபெற்ற வன்னிய மக்களுக்கு MBC இட ஒதுக்கீட்டு ஏழு நாட்கள் சாலை மறியல் போராட்டத்தில் உயர் நீத்த தியாகிகளுக்கு வன்னியர் சங்கம் மற்றும் பாமக சார்பாக மலர்கள் தூவியும் மெழுகுவர்த்தி ஏந்தியும் வீரவணக்கம் கோஷங்களிட்டும் நினைவஞ்சலி செலுத்தினர்.மாநில செயற்குழு உறுப்பினர் மோகன்ராஜ் தலைமையேற்றார்,மாநில மாணவரணி செயலாளர் T.பாலு முன்னிலை வகித்தார்,மாவட்ட செயலாளர் ஓ.பி பொன்னுசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.மேலும் பாமக நகரத் தலைவர் க.மணிகண்டன் அனைவரையும் வரவேற்றார்,நகர வன்னியர் சங்க செயலாளர் கணேசன்,மாவட்ட மாணவரணி செயலாளர் குமார் நகர பொறுப்பாளர்கள் யுவராஜ், பன்னிர்செல்வம்,கார்த்தி,மனோஜ்,கணபதி,கார்த்தி,அபினேஸ்,விஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story