நத்தத்தில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா

நத்தத்தில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா
நத்தத்தில் விஸ்வகர்மா ஐந்தொழிலாளர்கள் சங்கம் சார்பில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தில் விஸ்வகர்மா ஐந்தொழிலாளர்கள் சங்கம் சார்பில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா நடைபெற்றது. இதற்கு தலைவர் ரவீந்திரன் தலைமை தாங்கினார். செயலர் எம்.முருகேசன், பொருளாளர் ஆர்.முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் சங்கக் கொடி ஏற்றி அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் மாடசுவாமி, முருகன், ஆறுமுகம், கணேசன் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு விஸ்வகர்மா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முன்னதாக உலக நன்மை வேண்டி சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றன. இதில் மணி, ஈஸ்வரன், காசிலிங்கம்,கோபால், அழகு, பாண்டியன், பத்மகுமார், கதிர்வேல், சுரேஷ்குமார், கார்த்திகேயன், மாரியப்பன்., தினேஷ் உள்ளிட்ட சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அன்னதானம் வழங்கபட்டது.
Next Story