விருத்தாசலம் அருகே சாலையோர பள்ளத்தில் இறங்கிய கார்

விருத்தாசலம் அருகே சாலையோர பள்ளத்தில் இறங்கிய கார்
கணவன் மனைவி அதிர்ஷ்டவசமாக உயர்தப்பினர்
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சித்தலூர் பைபாஸ் அருகே மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து பெங்களூரு நோக்கி சென்று கொண்டு இருந்த கார் ஒன்று சித்தலூர் பைபாஸ் சாலையில் வந்து கொண்டிருக்கும் பொழுது எதிரே ஒரு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நபர் திடீரென வாகனத்தை வளைக்க முற்படும்போது,அவர் மீது மோதாமல் இருக்க சாலையோர பள்ளத்தில் இறக்கி கார், விபத்தில் சிக்கியது. இதில் கார் இருசக்கர வாகனத்தில் லேசாக இடித்ததில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த ஒருவர் சிறிய காயங்களுடன் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார், மேலும் காரில் பயணம் செய்த கணவன் மனைவி இருவரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்,தகவல் அறிந்து வந்த விருத்தாச்சலம் காவல்துறையினர் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story