பெண்ணாடம் அருகே சிறுமியுடன் உல்லாசத்தில் ஈடுபட்ட வாலிபர்

பெண்ணாடம் அருகே சிறுமியுடன் உல்லாசத்தில் ஈடுபட்ட வாலிபர்
போக்சோ வழக்கில் கைது
விருத்தாசலம் அடுத்த பெண்ணாடம் அருகே உள்ள இறையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி மகன் அஜித் (26). இவர் பெண்ணாடம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் 17 வயது சிறுமி ஒருவரை காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி, தனியாக பேச வேண்டும் என விவசாய நிலத்திற்கு அழைத்து சென்று அவருடன் உல்லாசத்தில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து சிறுமியின் தாயார் விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி மற்றும் போலீசார் அஜித் மீது போக்சோ வழக்கு பதிந்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story