விருத்தாசலத்தில் பெரியார் பிறந்த நாள் விழா

விருத்தாசலத்தில் பெரியார் பிறந்த நாள் விழா
திமுக தலைமையில் அனைத்து கட்சி சார்பில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
தந்தை பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு விருத்தாசலம் நீதிமன்றம் முன்பு உள்ள பெரியார் சிலைக்கு திமுக தலைமையில் அனைத்து கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திமுக நகரச் செயலாளர் தண்டபாணி தலைமை தாங்கினார். விருத்தாசலம் நகர மன்ற தலைவர் டாக்டர் சங்கவி முருகதாஸ், ஒன்றிய செயலாளர்கள் கனக கோவிந்தசாமி, வேல்முருகன், பொதுக்குழு உறுப்பினர் அரங்க பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் ராமு அனைவரையும் வரவேற்றார். சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் இமயம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ததுடன், சமூக நீதி நாள் கடைபிடிக்கப்பட்டு உறுதி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில் திக மாவட்ட தலைவர் இளங்கோவன், மாநில இளைஞரணி செயலாளர் இளந்திரையன், மாவட்ட செயலாளர் அறிவுடைச்செல்வன், விசிக மாவட்ட செயலாளர் நீதி வள்ளல், மண்டல துணைச் செயலாளர் அய்யாயிரம், நகர செயலாளர் முருகன், ஒன்றிய செயலாளர் சுப்பு ஜோதி, காங்கிரஸ் நகர தலைவர் ரஞ்சித்குமார், மாவட்ட பொதுச் செயலாளர் கண்ணன், நகர பொருளாளர் கதிர்வேல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்ட செயலாளர்கள் கலைச்செல்வன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வட்ட செயலாளர் பாலமுருகன், மதிமுக அய்யாவு, உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கலந்துகொண்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். திமுக நகர துணை செயலாளர் நம்பிராஜன், சந்தான லட்சுமி சுந்தரமூர்த்தி, அவை தலைவர் செங்குட்டுவன், நகர பொருளாளர் மணிகண்டன், நகர இளைஞரணி அமைப்பாளர் பொன்.கணேஷ், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் செல்வமணி, மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் ரவிச்சந்திரன், நகர இளைஞரணி துணை அமைப்பாளர்கள் தளபதி குமார், மணிவண்ணன், செந்தில்குமார், வாணன் கார்த்திக், மாரிமுத்து, வேல்முருகன், சத்யராஜ், வட்டச் செயலாளர்கள் பரந்தாமன், மணலூர் முருகன், முருகன் சரவணன் , பரமசிவம், வெங்கடேசன், மோகன், கொளஞ்சிநாதன், இளைஞர் அணி விஜி , வீரமணி, பாலாஜி, அகத்தியன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story