விருத்தாசலம் அருகே அரசு பஸ் தற்காலிக டிரைவர் விஷம் குடித்து தற்கொலை

விருத்தாசலம் அருகே அரசு பஸ் தற்காலிக டிரைவர் விஷம் குடித்து தற்கொலை
காதல் தோல்வியால் விபரீத முடிவு?
விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள மருங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாயவேல் மகன் பைரவன் (31). விருத்தாசலம் அரசு பேருந்து பணிமனையில் தற்காலிக டிரைவராக பணிபுரிந்து வந்த நிலையில் அவருக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வந்துள்ளது இந்நிலையில் அவர் மருங்கூர் பஸ் நிறுத்தத்தில் விஷ மருந்து குடித்துவிட்டு மயங்கி கிடந்துள்ளார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து கடலூர் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு சென்ற போது வழியிலேயே இறந்து விட்டார். இதுகுறித்து புகாரின் பேரில் கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து பைரவன் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story