தனியார் கல்லூரி வளாகத்தில் சமையல் தொழிலாளி கால் மீது கார் ஏறி இறங்கியதில் தொழிலாளி படுகாயம்

தனியார் கல்லூரி வளாகத்தில் சமையல் தொழிலாளி கால் மீது கார் ஏறி இறங்கியதில் தொழிலாளி படுகாயம்
குமாரபாளையம் தனியார் கல்லூரி வளாகத்தில் சமையல் தொழிலாளி கால் மீது கார் ஏறி இறங்கியதில் தொழிலாளி படுகாயமடைந்தார்
ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் வசிப்பவர் மனோகரன், 53. சமையல் தொழிலாளி. இவர் குமாரபாளையம் அருகே தனியார் பொறியியல் கல்லூரியில் சமையல் வேலை செய்து வருகிறார். இவர் செப். 12ல், அதிகாலை 02:00 மணியளவில் வேலை முடிந்து, கல்லூரி வளாகத்தில் படுத்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது, கல்லூரி வளாகத்தில் வேகமாக வந்த கார் ஒன்று, இவரது வலது முழங்கால் மீது காரின் இடது, முன் மற்றும் பின் சக்கரங்கள் ஏறி இறங்கியதில், மனோகரன் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இது குறித்து குமாரபாளையம் போலீசில் புகார் செய்ய, போலீசார் விபத்துக்கு காரணமான ஈரோடு மாவட்டம், நாராயண வலசு பகுதியை சேர்ந்த டிப்பார்ட்மெண்ட் ஸ்டோர் தொழில் செய்து வரும் சௌமேஷ், 20, என்பவரை கைது செய்தனர்.
Next Story