ராசிபுரம் அருகே ஆறு வயது சிறுவன் உள்ளிட்ட நான்கு பேரை கடித்த வெறி நாய்
Rasipuram King 24x7 |18 Sep 2024 1:11 PM GMT
ராசிபுரம் அருகே ஆறு வயது சிறுவன் உள்ளிட்ட நான்கு பேரை கடித்த வெறி நாய்
ராசிபுரம் அருகே தெரு நாய் கடித்ததில் 6 வயது சிறுவன் உட்பட 4பேரை வெறி நாய் கடித்ததில் படுகாயங்களுடன் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதி.. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மல்லூர் அருகே உள்ள சந்தியூர் பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி(32) ,தீபா(27) தம்பதியினர் மகன் தனுஷ்(6) இன்று காலை வீட்டின் அருகாமையில் உள்ள கழிவறைக் குச் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது தெருவில் வந்த நாய் 6 வயது சிறுவனை தெரு நாய் துரத்தி கடித்துள்ளது. சிறுவனை அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் தெரு நாய் துரத்திவிட்டு சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.தற்போது சிறுவனுக்கு மருத்துவர்கள் முதல் உதவி சிகிச்சை அளித்த நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் குட்டலாடம்பட்டி பகுதியை சேர்ந்த பழனியம்மாள் என்பவர் தனது மகனுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது சாலையில் வந்த வெறி நாய் துரத்தி கடித்ததாகவும், மேலும் மற்ற 2 நபர்களை துரத்தி கடித்ததில் தற்போது 6 வயது சிறுவன் உட்பட 4பேர் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் சம்பவம் தொடர்பாக சந்தியூர் பகுதியை சேர்ந்த சிவா கூறுகையில் தெரு நாய் சிறுவனை கடித்தது தொடர்ந்து,சாலையில் நடந்து சென்ற பலரை துரத்தி கடிக்கும் முயன்றதாகும் கூறினார். மேலும் ராசிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாகவே வெறி நாய் மற்றும் தெரு நாய்களின் தொல்லை அதிகளவில் உள்ளதாகவும் வெறிநாய்களை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது..
Next Story