எலி பேஸ்ட் சாப்பிட்ட பெண் சிகிச்சை பலனின்றி சாவு

எலி பேஸ்ட் சாப்பிட்ட பெண் சிகிச்சை பலனின்றி சாவு
புற்றுநோய் வேதனையில் விபரீத முடிவு
விருத்தாசலம் காந்தி நகர் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மனைவி ரேணுகாதேவி (வயது 48). இவர் கர்ப்பப்பை புற்றுநோய் சிகிச்சை எடுத்து வருவதாக தெரிகிறது. இதனால் அடிக்கடி வலி இருந்ததால் கடந்த 14 ஆம் தேதி காலையில் எலி பேஸ்ட் சாப்பிட்டுவிட்டு மயங்கி கிடந்தார். உடன் அவரை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்து அங்கு தீவிர சிகிச்சை அளித்தும். சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். இதுகுறித்து அவரது மகன் முரளி கொடுத்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story