தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற இருவர் கைது

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற இருவர் கைது
கம்மாபுரம் போலீசார் நடவடிக்கை
கம்மாபுரம் சப் இன்ஸ்பெக்டர் அமிர்தலிங்கம் தலைமையிலான போலீசார் விருத்தாச்சலம் பெரிய கோட்டு முளை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் (வயது 61) என்பவர் அவரது கடையில் அரசு அனுமதியின்றி அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரிய வந்தது. அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதே போல சிறுவரப்பூர் பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த அதே பகுதியைச் சேர்ந்த உத்தண்டி ( 55) என்பவரை பிடித்து வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story