மதுபாட்டில் விற்ற இருவர் கைது 

மதுபாட்டில் விற்ற இருவர் கைது 
66 பாட்டில்கள் பறிமுதல்
விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் பொட்டா தலைமையிலான போலீசார் கோணாங்குப்பம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அப்பகுதியில் அரசு அனுமதி இன்றி மது பாட்டில்கள் விற்பனை செய்த கோமங்கலம் கிராமத்தை சேர்ந்த சேகர் மகன் பார்த்தசாரதி (வயது 21) என்பவரை பிடித்து வழக்கு பதிவு செய்து கைது செய்து அவரிடம் இருந்த 40 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதே போல மங்கலம்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையிலான போலீசார் வலசை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அதே பகுதியை சேர்ந்த சேகர் (48), என்பவர் அவரது வீட்டில் அரசு அனுமதி இன்றி மது பாட்டில்கள் விற்பனை செய்த போது அவரை கையும் களவுமாக பிடித்து வழக்கு பதிவு செய்து கைது செய்து அவரிடம் இருந்த 26 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story