அவசர பராமரிப்பு பணி காரணமாக மின்வினியோகம் நிறுத்தம்.மின் வாரிய அதிகாரிகள் அறிவிப்பு.

அவசர பராமரிப்பு பணி காரணமாக மின்வினியோகம் நிறுத்தம்.மின் வாரிய அதிகாரிகள் அறிவிப்பு.
அவசர பராமரிப்பு பணி காரணமாக மின்வினியோகம் நிறுத்தம்.மின் வாரிய அதிகாரிகள் அறிவிப்பு. இது தொடர்பாக மின்வாரிய அதிகாரிகள் வெளியிட்டுள்ள அவசர செய்தி குறிப்பில், கரூரை அடுத்த நொய்யல் துணை மின் நிலையத்திற்கு வரும் மெயின் டவர் லைனில் அவசர பராமரிப்பு பணி இன்று மேற்கொள்ளப்படுகிறது. அதன் காரணமாக நொய்யல் துணை மின் நிலையத்தில் மின் வினியோகம் இருக்காது. மேலும், நொய்யல் துணை மின் நிலையத்தில் செப்டம்பர் 19ல் மாதாந்திர பராமரிப்பு பணியும் அதனுடன் சேர்ந்து நடைபெற இருப்பதால், நொய்யல் பிரிவு அலுவலகத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது, எனவும் எனவே, இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், வணிக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் தங்கள் பணிகளை முன்கூட்டியே முடிந்து கொள்ளுமாறும் ஆலோசனை வழங்கி உள்ளனர்.
Next Story