தமிழகத்தில் அதிமுக ஆட்சி மீண்டும் அமைந்தபின் தூத்துக்குடியில் புதிய பாலங்கள் கட்டப்படும் என்று முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் பேசினாா்

தமிழகத்தில் அதிமுக ஆட்சி மீண்டும் அமைந்தபின் தூத்துக்குடியில் புதிய பாலங்கள் கட்டப்படும் என்று முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் பேசினாா்
தமிழகத்தில் அதிமுக ஆட்சி மீண்டும் அமைந்தபின் தூத்துக்குடியில் புதிய பாலங்கள் கட்டப்படும் என்று முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் பேசினாா்
தூத்துக்குடியில் அண்ணா 116வது பிறந்தநாளையொட்டி டூவிபுரம் 5வது தெருவில் அதிமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு பகுதி செயலாளர் நட்டார்முத்து, தலைமை வகித்தார். பகுதி செயலாளர் ஜெய்கணேஷ், துணைச் செயலாளர் செண்பகச் செல்வன், பகுதி ஜெ பேரவை செயலாளர் சுடலைமணி, திருநெல்வேலி மண்டல தகவல் தொழில்நுட்ப பிாிவு இணைச் செயலாளரும் மாநகராட்சி எதிர்கட்சி கொறடாவுமான வக்கீல் மந்திரமூர்த்தி, மாவட்ட ஜெ பேரவை துணைச்செயலாளர் மாாியப்பன், ஆகியோர் முன்னிலை வகித்தனா். பகுதி செயலாளர் முருகன், வரவேற்புரையாற்றினார். கூட்டத்தில் அதிமுக தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சண்முகநாதன் பேசுகையில் "அதிமுக ஆட்சியில் இந்த தொகுதியில் செய்த பணிகள் ஏராளம் உண்டு அதில் குறிப்பாக முதல் குடிநீர் திட்டத்தை குரூஸ்பா்னாந்தும் இரண்டாவது திட்டத்தை எம்.ஜி.ஆரும் 3ம் திட்டம் 4ம் திட்டத்தில் 284 கோடி ஓதுக்கீடு செய்து அதன் மூலம் குடிதண்ணீர் பிரச்சனை தீர்க்கப்பட்டது. இதனால் 20 ஆண்டுகளுக்கு தண்ணீர் பற்றாக்குறை வராது. 2011 தேர்தலின்போது விவிடி மேம்பாலம் அமைக்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதியில் ஜெயலலிதா கூறினார். அதன்பின் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதின் காரணமாக அந்த பணி தொடராமல் நிலுவையில் இருந்து வருகிறது. இதில் அக்கறை செலுத்தாமல் திமுக அரசு இருப்பது மக்களுக்கு பாதிப்பாக அமைந்துள்ளது. நான்காம் இரயில்வே கேட் பகுதியிலும் ஓரு மேம்பாலம் அமைத்திருக்கலாம் இரண்டையும் அதிமுக ஆட்சி மீண்டும் அமைந்தபின் நிறைவேற்றும். விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு முழுமையான ஆதரவை எம்.ஜி.ஆர் வழங்கி தமிழர்களின் நலனை பாதுகாத்தாா். தமிழகத்தில் பலருக்கும் டாஸ்மாக் ஆலை உள்ளது. அதே போல் சசிகலாவுக்கும் உள்ளது. 7.5 சதவீத இட ஓதுக்கீட்டின் படி அதிமுக ஆட்சியில் மருத்துவ படிப்பை மேற்கொண்டதின் மூலம் 3442 குடும்பங்கள் மகிழ்ச்சியாகவுள்ளன.
Next Story