நாணப்பரப்பு பிரிவு அருகே டூவீலர்கள் மோதல். ஒருவர் படுகாயம். காவல்துறை வழக்கு பதிவு.
Karur King 24x7 |19 Sep 2024 10:16 AM GMT
நாணப்பரப்பு பிரிவு அருகே டூவீலர்கள் மோதல். ஒருவர் படுகாயம். காவல்துறை வழக்கு பதிவு.
நாணப்பரப்பு பிரிவு அருகே டூவீலர்கள் மோதல். ஒருவர் படுகாயம். காவல்துறை வழக்கு பதிவு. நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் வெங்கரை, காளிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தேவன் வயது 54. இவரது சகோதரர் கரூர், ஆத்தூர், காயத்ரி நகர், வீனஸ் கார்டனையைச் சேர்ந்தவர் சேதுபதி வயது 56. சேதுபதி செப்டம்பர் 15ஆம் தேதி மாலை 7 மணி அளவில் கரூர் - சேலம் சாலையில், அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார். இவரது வாகனம் நாணப்பரப்பு பிரிவு சாலை அருகே சென்ற போது, சேலம் மாவட்டம், ஓமலூர், சௌடம்மாள் கோவில் தெருவை சேர்ந்த சுரேஷ் வயது 39 என்பவர் ஓட்டி வந்த மற்றொரு டூவீலர், சேதுபதி ஓட்டிச் சென்ற டூவீலரின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் நிலை தடுமாறி வாகனத்துடன் கீழே விழுந்த சேதுபதிக்கு தலை மற்றும் முகத்தில் பலத்த காயமடைந்ததால், உடனடியாக அவரை மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கோவையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அறிந்த சேதுபதியின் சகோதரர் தேவன் அளித்த புகாரில், சம்பவ இடத்தில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு, டூவீலரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய சுரேஷ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.
Next Story