திருமண நிகழ்வுக்கு சென்றவரின் வீட்டில் நள்ளிரவில் மர்ம நபர்கள் கைவரிசை
Palladam King 24x7 |19 Sep 2024 1:34 PM GMT
15 சவரன் நகை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் கொள்ளை.
பல்லடம் அருகே பெரும்பாலி வெற்றி அவென்யு பகுதியில் வசித்து வருபவர் சரவணகுமார். இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் நிலையில் தனது உறவினரின் திருமண நிகழ்விற்காக குடும்பத்தோடு பணிக்கம்பட்டி கிராமத்திற்கு சென்றுள்ளார். திருமண நிகழ்வை முடித்துவிட்டு சரவணக்குமார் வீடு திரும்பிய நிலையில் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு 15 சவரன் நகை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தை மர்ம நபர்களால் திருடப்பட்டு இருப்பது குறித்து சரவணகுமார் பல்லடம் காவல்துறைக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த பல்லடம் காவல்துறையினர் தடயவியல் நிபுணர்களோடு சரவணகுமார் வீட்டில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமண நிகழ்விற்கு சென்றவரின் வீட்டில் நள்ளிரவில் மர்ம நபர்கள் கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
Next Story