பக்தர்களின் நீண்டநாள் கோரிக்கை மீண்டும் ஏற்பு

பக்தர்களின் நீண்டநாள் கோரிக்கை மீண்டும் ஏற்பு
பக்தர்களின் நீண்டநாள் கோரிக்கை மீண்டும் ஏற்பு
திண்டுக்கல் தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோயிலில் ரதி மன்மத பூஜைக்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் தாடிக்கொம்பு ஶ்ரீசௌந்தரராஜப் பெருமாள் திருக்கோயிலில், வியாழக்கிழமைதோறும் மன்மதன், ரதி பூஜை பல ஆண்டுகளாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த பூஜையில் கலந்து கொண்டால் திருமணத்தடை நீங்கும், கணவன், மனைவி ஒற்றுமை பலப்படும். இந்த பூஜையில் கலந்து கொள்ளும் பக்தர்கள் பொறுமையாக அமர்ந்து கொண்டு,பூஜையை முழுமையாகக் காணும் அளவிற்கு, அறங்காவலர் குழுவினால் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. இனிவரும் நாட்களில் பக்தர்கள் பொறுமையாக அமர்ந்து கொண்டு, பூஜையை முழுமையாகக் காணலாம். பூஜை நேரங்கள்: காலை: 7.30, 09.30,11.30, மாலை: 5.30 , இவ்வாறு அறங்காவலர் குழு தலைவர் , அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் திருக்கோயில் செயல் அலுவலர் அறிவித்துள்ளார்.
Next Story