தெரு நாய்களுக்கான கருத்தடை முகாம்

பொதுமக்கள் பாராட்டு
பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் அதிக அளவில் தெரு நாய்கள் இருந்தன.இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர்.இதனை அடுத்து பல்லடம் நகராட்சி நிர்வாகம் மற்றும் தங்கம் மெமோரியல் டிரஸ்ட் இணைந்து தெரு நாய் கருத்தடை முகம் மற்றும் வெறிநாய் கடி தடுப்பூசி முகாமை நடத்தினர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுத்த பல்லடம் நகராட்சிக்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
Next Story