மூன்று சக்கர பேட்டரி வாகனத்தின் மீது பின்னால் வந்த இரு சக்கர வாகனம் மோதி பெண் உயிரிழப்பு

மூன்று சக்கர பேட்டரி வாகனத்தின் மீது பின்னால் வந்த இரு சக்கர வாகனம் மோதி பெண் உயிரிழப்பு
மூன்று சக்கர பேட்டரி வாகனத்தின் மீது பின்னால் வந்த இரு சக்கர வாகனம் மோதி பெண் உயிரிழப்பு
மூன்று சக்கர பேட்டரி வாகனத்தின் மீது பின்னால் வந்த இரு சக்கர வாகனம் மோதி பெண் உயிரிழப்பு திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள மூலனூர் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் இவரது மனைவி வீரமணி வயது 54. இவர் தாராபுரம் கரூர் சாலையில் உள்ள மூலனூர் அண்ணா நகர் விநாயகர் கோவில் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட மூன்று சக்கர பேட்டரி வாகனம் மீது இவர் ஒட்டி வந்த இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இருசக்க வாகனத்தில் பயணம் செய்த மாணிக்கம் என்பவரது மனைவி வீரமணி எதிர்பாராதமாக கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். படுகாயம் அடைந்த வீரமணியை அக்கம் பக்கத்தினர் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்ததாக தெரிவித்தனர். இதுகுறித்து மூலனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story