கீரனுாரில் நாளை மின்தடை!

கீரனுாரில் நாளை மின்தடை!
மின் நிறுத்தம்
கீரனூர்: அம்மாசத்திரம் துணைமின் நிலையத்தின் கீரனூர் பஜார் மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடக்கவுள்ளதால் கீரனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பரந்தாமன் நகர், கீழ காந்திநகர், மேல காந்திநகர், நான்கு ரத வீதிகள், கிராஸ்கட் ரோடு எழில் நகர், என்ஜிஓ காலனி, முஸ்லீம் தெரு, பஸ் நிலையம், ஜெய்ஹிந்த் நகர், அரசு அலுவலர்கள் குடியிருப்பு, பசுமை நகர், அழகு நகர் ஆகிய பகுதிகளில் நாளை (21ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இத்தகவலை உதவி செயற்பொறியாளர் சரவணன் தெரிவித்துள்ளார். இதேபோல் குன்றாண்டார்கோவில் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட குன்றாண்டார்கோவில், தெம்மாவூர், செங்களூர், கிள்ளுக்கோட்டை, உடை யாளிப்பட்டி, ராக்கத்தாம்பட்டி, ஒடுகம்பட்டி, வாழ மங்கலம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று கீரனூர் உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்
Next Story