இருசக்கர வாகனத்தில் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர் கைது
Pudukkottai King 24x7 |20 Sep 2024 4:02 AM GMT
குற்றச் செய்திகள்
இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்து அந்தப் படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றிய இளைஞரை போலீஸார் கைது செய்தனர். புதுக்கோட்டை மாலையீடு தங்கம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மரிய ஜான் பிரிட்டோ (23). இவர் அதிக சத்தத்துடன், அதிவேகத்தில் இருசக்கர வாகனத்தை இயக்கி, அந்தப் படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.இதைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் குற்றம் உள்ளிட்ட 8 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த நகர காவல்நிலைய போலீஸார் கைது செய்தனர்.
Next Story